Saturday, August 16, 2014

மாணவ, மாணவிகளுக்கு புதுகையில் செஸ் போட்டி 17ம் தேதி நடக்கிறது

புதுக்கோட்டை, : சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி வரும் 17ம் தேதி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலர் மன்றத்தில் நடக்கிறது.
 இதில் 10 வயதிற்குட்பட்டோர், 15 மற்றும் 25 வயதிற்குட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட உள்ளது. எனவே மாவட்ட அளவிலான செஸ்  போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை தபாலிலோ அல்லது 97863-82393 என்ற செல் எண்ணிலோ தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம். 
மேலும் போட்டி நடைபெறும் 17ம் தேதி காலை 9 மணி முதல் அலுவலர் மன்றத்தில் பதிவு செய்தும் கலந்துகொள்ளலாம். போட்டியாளர்களே தங்களது சதுரங்க அட்டை மற்றும் காய்களை கொண்டு வரவேண்டும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இத்தகவலை புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழக தலைவர் கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments: