Friday, July 4, 2014

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 தொடக்கப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?


பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 23 ஆயிரத்து 815 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் இப்பள்ளிகளில் 14 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடக்கப்பள்ளிகளில் மட்டும் சுமார் 60 ஆயிரத்து 980 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர் இருக்கவேண்டும். ஆனால் அரசு தொடக்கப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற கணக்கீடு பின்பற்றப்படுகிறது. 200 மாணவர்களுக்கு மேல் இருந்தால் 40 மாணவர்களுக்கு ஓராசிரியர் நியமனம் செய்யப்படுகின்றனர்.



அரசு தொடக்கப்பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை
படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளதாக சுமார் 1268 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளை மூடிவிட்டு அந்த மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பது குறித்து அரசு, கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் தாமஸ் அமலநாதன் கூறுகையில், மாணவர் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கேள்விக்குறியாகிவிடும்.


பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து ஆக்கப் பூர்வமான ஆலோசனை நடத்தவேண்டும். தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகப்படுத்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கவேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது, என்றார்

குரூப்-1 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?இணைய தளத்தில் சரிபார்க்கலாம்


சென்னை:வரும், 20ம் தேதி நடக்கும், குரூப் 1 தேர்வுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பெயர் பட்டியல் மற்றும், வரும், 27ம் தேதி நடக்கும், உதவி பொறியாளர் தேர்வுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு:வரும், 20ம் தேதி, குரூப் 1 நிலையில், 79 காலி பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடக்கிறது. இதற்கு, 1.65 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். சரியான முறையில் விண்ணப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்தியவர்களின் பெயர் பட்டியல்,

www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதேபோல், வரும், 27ம் தேதி, 98, உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடக்கிறது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பெயர் பட்டியலும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 'தங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா' என்பதை, இணையதளத்தில் பார்த்து, விண்ணப்பதாரர்கள் உறுதி செய்து கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்தியும், பெயர் இல்லை எனில், உரிய ஆதாரங்களுடன், contacttnpsc@gmail.com என்ற, இமெயில் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
Click Here

சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 1,112 பேர்!


  • மத்திய பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி), 4 வகையான சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 1,112 பேர் மேற்கண்ட பணிகளில் நியமிக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
  • ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் குரூப் ஏ மற்றும் பி வகை மத்திய பணிகள் ஆகியவைதான் அவை. இந்தப் பட்டியலில், கவுரவ் அகர்வால் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
  • இரண்டாமிடத்தை முனிஷ் சர்மா என்பவரும், மூன்றாமிடத்தை ரசித் ராஜ் என்பவரும் பெற்றுள்ளனர்.
  • 3 அடுக்குகளாக நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வில், பொதுப்பிரிவில் இருந்து 517 பேரும், OBC பிரிவிலிருந்து 326 பேரும், SC பிரிவிலிருந்து 187 பேரும், ST பிரிவிலிருந்து 92 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • மொத்தம் 1,112 பேரில், 180 பேர் IAS பணிக்கும், 32 பேர் IFS பணிக்கும், 150 பேர் IPS பணிக்கும், 710 பேர் குரூப் ஏ மத்திய பணிக்கும், 156 பேர் குரூப் பி மத்திய பணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • முடிவுகளை www.upsc.gov.in என்ற வலைதளத்தில் விரிவான அறிந்து கொள்ளலாம் மற்றும் மதிப்பெண் விபரங்கள் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எண்ணமில்லை; மத்திய அரசு

TO DOWNLOAD CENTRAL GOVT LETTER CLICK HERE...
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டமில்லை என்று அகில இந்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பிற்கு மத்திய அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆறாவது ஊதியக் குழு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க பரிந்துரை செய்யவில்லை என்றும், இதை அப்பொழுது மத்திய அரசு 29.08.2008 அன்றைய தீர்மானத்தில் ஏற்றுகொண்டது என்று தெரிவித்துள்ளது.ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் கோரிக்கை இதன் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும்கல்வி இயக்ககத்தில் கணினி விவர பதிவாளர்கள் (டேட்டா, என்ட்ரி ஆபரேட்டர்)பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

        

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைவருக்கும் கல்வி இயக்கதிட்டம்,மாவட்ட திட்ட அலுவலகம், வட்டார வள மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் கணினி விவர பதிவாளர்(டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணிகளுக்காக தகுதியானநபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
பணி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்,
பணியிட எண்ணிக்கை : 16,
கல்வி தகுதிகள் : பட்டப்படிப்புடன் கூடிய டி.சி.ஏ,தட்டச்சு உயர்நிலை (தமிழ், ஆங்கிலம்),
சம்பளம் : ரூ 6,000.
இந்த நியமனம்ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக நியமனமாகும்.விண்ணப்பங்களை காஞ்சிபுரம் அனைவருக்கும் கல்வி இயக்கம், மாவட்ட திட்டஅலுவலகத்தில் வேலை நாட்களில் பெறலாம். செய்தி வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். நேர்முக தேர்விற்கானதேதி பின்னர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பங்கள்,
கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்,
மாவட்ட திட்டஅலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம்,
இராணி அண்ணாதுரை நகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளி வளாகம்,
காஞ்சிபுரம் - 631 501
என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு 044-27230456 என்ற தொலைபேசியில்தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஒரு செயல் ஆராய்ச்சியாளர்

BRTES PUDUGAI :

 ‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் ”-என வள்ளுவர் வகுத்த அழியாத கருத்தை ஆழ்மனதில் புகுத்தி அகிலத்தை வலம் வர ஒவ்வொரு மாணவனையும் வழிகாட்டும் ஆசிரியர் தன் பணியில் (கற்பித்தல்) பன்முகத்திறன் பெற்றவராய் விளங்கினாலும்,ஒவ்வொரு மாணவனையும் பட்டைத் தீட்டி அவரவர் வாழ்வில் பளபளக்கும் வைரங்களாக மாற்ற வேண்டிய சிறந்த பொறுப்பை ஏற்கிறார். எனவே தலைசிறந்த பணியைச் சிறப்பாக முடிக்க ஒவ்வொரு ஆசிரியரும்,ஒவ்வொரு நொடியும் ஒரு ஆராய்ச்சியாளராக செயல்பட்டு தனது ஆராய்ச்சியில் வெற்றி கொள்கிறார். ஓர் ஆசிரியர் எவ்வெவ் வகைகளில் தனது ஆராய்ச்சிப் பணியை பரிசீலனை செய்து, பன்முக வெற்றியை சுவீகாரம் எடுக்கிறார், என்பதை இந்தப் பகுதியில் தரம் பிரிப்போம்… கற்பித்தல் பணியில் ஆசிரியரின் ஆராய்ச்சி: ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது-என்ற கூற்றை அனைவரும் அறிவோம்.நம் திண்ணைப் பள்ளிகளும் இன்று நடைமுறையில் இல்லை.நம் சமுதாயம் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் வியந்து போவோம்.வெகு காலம் கடந்து இன்னும் களைப்படையாமல் நடக்கிறோம். இன்றைய சூழலில் கல்வியின் அருமை பெருமைகள் நமக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.கல்வியின் மேம்பாடும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் சம அளவில் உயர்ந்து நிற்கும் தராசுத் தட்டுகள் போலக் காணப்படும் இந்த நிலையில்,உயர்ந்த செறிவுமிக்க கல்வியை மாணவச் செல்வங்களுக்குக் கற்றுத்தர வேண்டுமெனில், ஆசிரியர்கள் மிக்க கற்பித்தல் திறன் உடையவராய் இருப்பது சாலச் சிறந்தது.இன்று ஆசிரியர்கள் மிகநல்ல கற்றல் அனுபவங்களைத் தம்மை நம்பியிருக்கும் மாணவருக்கு வழங்க, முக்கியப் பொறுப்பேற்கும் நிலையில் இருப்பதால் எந்தப் பாடங்களைக் கற்பிக்க முனைந்தாலும் விழிப்போடு ஆராய்ச்சிக்கண் கொண்டு செயல்படுகிறார்கள். பாடப் பொருளில் ஆசிரியரின் ஆராய்ச்சிப் பணி : கற்றல் அனுபவங்கள் சிறப்பாக இருக்க வேண்டுமானால், சிறந்த பாடப் பொருள் அவசியம்.மாணவர்க்கு அளிக்கப்படும் பாடப் பொருள் செறிவுடையதாகவும்,எளியனவாகவும்,மாணவரின் வயதிற்கும் அறிவு நிலைக்கும் பொருத்தமுடையதாகவும்,மாணவர்களின் மன நிலைக்கு ஏற்றவாறும்,அவனது திறனை மேம்பாடு செய்வதாகவும், அவனது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், அமைய வேண்டும். மனதில் நம்பிக்கை ஒளியூட்டு வதாகவும் அவனது அறிவுப் பசிக்கு தீனி போடுவதாகவும், அவனிடம் ஆராய்ச்சி மனப்பான்மையைத் தோற்றுவிப்பதாகவும்,எந்த ஒரு சிறு செயலையும் அறிவியல் பார்வையோடு அணுக அவனுக்கு வழிகோலுவதாகவும்,முழு ஆளுமைத் திறனை அவர்களுக்குள் வளர்க்க உறு துணை யாகவும், கருத்துச் செறிவுடனும்,பொருட் செறிவுடனும் உண்மையை மட்டுமே உள்ளடக்கி யதாகவும் இருந்து ஆழமாகவும், அழகாகவும் மாணவர் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்தால், அந்த ஆசிரியரால் வழங்கப்படும் கற்றல் அனுபவம் மாணவனை விட்டு எப்போதும் அகலாது. ஆகவே மேற்கண்ட எல்லா வகைகளிலும் சிறப்பானதொரு பாடப்பொருளை மாணவனுக்கு வழங்க,தனது ஒவ்வொரு கற்பித்தல் நிகழ்விலும் ஆசிரியர் அவரது முயற்சிகளை மாணவருக்கு செயல்களாக வழங்க ஆராய்ச்சி செய்து கொண்டேயிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் ஆசிரியர் பணி தொடரும்வரை இந்த ஆராய்ச்சியும் தொடருமல்லவா? அன்றேல் மிக நல்ல பாடப் பொருளைத் தராதவர் ஆகிடுவாரன்றோ! எனவே,இதன் மூலம் ஆசிரியர் மாணவர்க்கு ஏற்ற பாடப்பொருளைத் தருவதில் செயல் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் என்பது புலனாகிறது… பல்வேறு கற்பித்தல் முறைகளைக் கையாளும் ஆராய்ச்சியாளர்: எவ்வளவு செறிவுள்ள,அற்புதமான,அறிவு விருத்தி செய்யும் பாடப் பொருளாக இருந்தாலும்,ஆசிரியர் கற்பித்தல் நிகழ்வுகளை சரியான முறையில் அளிக்காவிடில் அங்கே கற்றல் அனுபவம் சிறந்த முறையில் கிடைக்காது அல்லவா?ஆகவே தன்னிடம் பயிலும் அத்துனைக் குழந்தைகளும் முழுமையாகக் கற்றல் அனுபவங்களைப் பெறுவதற்கு,வகுப்பறையில்,கற்பித்தல் நிகழ்வில் எண்ணிலடங்கா கற்பித்தல்-முறைகளைக் கையாண்டு வெற்றி கொள்ளும் ஆராய்ச்சிப் பணியில் ஆசிரியர் ஈடுபடுகிறார். எந்தப் பாடப் பொருளை எந்தக் கற்பித்தல் முறையைப் பயன்படுத்தி வழங்கலாம் என ஒவ்வொரு ஆசிரியருமே சிந்தித்து, கவனமுடன் வகுப்பறையில் அதைப் பயன்படுத்தி,சரியான, ஏற்ற கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்து கற்பித்தலில் வெற்றி காண்கிறார். எத்தனையோ முறைகளை ஆசிரியர்களாகிய நாம் அன்றாடக் கல்வி கற்பித்தலில் பயன்படுத்துகிறோம்….உதாரணமாக, · விரிவாக்க முறை · கதை சொல்லல் முறை · விதி வருமுறை · விதி விளக்கு முறை · செய்து-கற்றல் முறை · ஒப்படைப்பு முறை……………………..என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எல்லா முறைகளையும் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்பது இயலாததும், அவசியம் இல்லாத ஒன்றும் ஆகும். அதே நேரத்தில் ஏதாவது ஒரு கற்பித்தல் முறையை அவரவர் வகுப்புச் சூழலுக்கு ஏற்றபடி ஒவ்வொரு கற்பித்தலிலும் ஆசிரியராகிய நாம் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும். அந்தச் சரியான முறையை, தகுந்த வகுப்பறைச் சூழலுக்குப் பயன்படுத்த ஓர் ஆசிரியர் எடுத்துக் கொள்ள முற்படும் ஆராய்ச்சிகளோ ஏராளம்! ஏராளம்!ஆனால் மிகச் சரியான போதித்தல் முறையை ஏற்ற சூழலுக்கு தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் ஆசிரியர் மிகச் சரியான செயலாராய்ச்சியாளர் ஆகிறார். இவ்வாறு கற்பித்தல் களங்களில் கற்பிக்கும் முறைகளை அறிமுகம் செய்து வெற்றி பெறும் ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சியாளரே. (Next post will finish) This is my paper ,due to our Erode district Diet Seminor's programme...written by me and presented by me before 7 years,Even though I want to share with you all ...so now for You......About our Teacher's ..... I post now first half...another day next part,...Thank you... கட்டுரை. திருமதி.கோபால் உமா அவர்கள்

Thursday, July 3, 2014

ஐ.ஏ.எஸ். பணிநிலை என்பது என்ன?

     

அரசு என்பது ஒரு அறக்கட்டனை மாதிரி. அரசின் அதிகாரிகள்தான், அந்த அறக்கட்டளை நிர்வாகிகள். அந்த இரண்டுமே மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி
இந்தியாவின் உயர்ந்த ஆட்சிப் பணி அதிகாரிதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனப்படுகிறார். ஆங்கிலேயர் காலத்தில் ஐ.சி.எஸ்(Indian Civil Service) என்று இருந்தது, சுதந்திர இந்தியாவில் IAS (Indian Administrative Service) என்று பெயர் மாற்றப்பட்டது.
இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை நிர்வாகப் பதவிகளை வகிக்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், அரசு இயந்திரத்தை தலைமையேற்று இயக்குபவர்கள் இவர்களே.
அரசு என்பது வேறு. அரசு இயந்திரம் என்பது வேறு. ஏனெனில், ஆட்சிக்கு வருபவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். எனவே, அரசு அவ்வப்போது மாறும். ஆனால், அரசு இயந்திரம் மாறாது. அது, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டே இருக்கும். ஒரு அரசாங்கம்(Ministry) எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு இயந்திரம்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, மத்திய அரசு அல்லது மாநில அரசு ஆகிய இரண்டிலும் பணியமர்த்தப்பட முடியும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மத்திய அரசில் பணியமர்த்தப்படுவார் மற்றும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் பணியமர்த்தப்படுவார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பவர், சமூகத்தில் உயர்ந்த மதிப்பு பெற்றவராக திகழ்கிறார். நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று சொல்வதை ஏறக்குறைய 60% இந்திய மாணவர் சமூகம் வழக்கமாக வைத்துள்ளது, பலருக்கு அதைப்பற்றி பெரிதாக எதுவும் தெரியாமல் இருந்தாலும்கூட.
ஐ.ஏ.எஸ். எனும் பணி
ஐ.ஏ.எஸ். என்பது அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தும் பணி என்பதால், ஒரு நேர்மையான அதிகாரியால், சமூகத்திற்கு நிறைய சேவைகளை செய்ய முடியும். ஆனால், இப்பணியில் உள்ள அதிகாரம், சலுகைகள், வெகுமதிகள், சமூக அந்தஸ்து உள்ளிட்ட பல காரணங்களே, இப்பணிக்கு வர வேண்டும் என்று பலரைத் தூண்டுகிறது.
ஐ.ஏ.எஸ். பணி என்பது இந்திய நிர்வாக கட்டமைப்பில், அதிக அதிகாரத்தையும், அதிக பொறுப்பையும் கொண்டதாகும். மத்திய அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் கேபினட் செயலாளர் என்ற பதவியிலும், மாநில அரசின் உத்தரவுகளை செயல்படுத்தும் தலைமைச் செயலாளர் என்ற பதவியிலும் இருப்பவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே.
ஐ.ஏ.எஸ். பணி நிலைக்கு சமமாக, இந்திய வெளியுறவு பணிகள்(Indian Foreign Service) எனப்படும் பணி உள்ளது. ஆனால், உள்நாட்டு நிர்வாகத்தில் இதற்கு சம்பந்தமில்லை. உள்நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை, IAS பணிதான் உயர்ந்தது. இதற்கு அடுத்த நிலையில் ஐ.பி.எஸ்.(இந்திய காவல் பணிகள்) வருகிறது. அதற்கடுத்து IFS(Indian Forest Service) எனப்படும் இந்திய வனப் பணிகள் வருகின்றன.
IAS பணிக்கு தேவையான தகுதிகள்
நேர்மறை எண்ணம் தலைமைத்துவ பண்பு ஆளுமைத் திறன் தைரியம்உறுதியான மனப்பாங்கு தன்னம்பிக்கை ஒவ்வொரு நெருக்கடி சூழலிலும் அமைதியைக் கடைபிடித்தல் நல்ல தகவல்தொடர்பு திறன் நல்ல அறிவுத்திறன் சிறப்பான பொதுஅறிவு
ஐ.ஏ.எஸ். தேர்வெழுதுவதற்கான அடிப்படை தகுதிகள்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளின் மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள். அத்தேர்வை எழுதும் ஒருவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த ஒருவர், ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதலாம். மேலும், பட்டப் படிப்பு இறுதித் தேர்வை எழுதப் போகிறவர்கள் அல்லது எழுதி முடித்து, தேர்வு முடிவுகளுக்கு காத்திருப்பவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வின், முதல்நிலைத் தேர்வை(Preliminary) எழுதலாம்.
MBBS அல்லது வேறொரு மருத்துவ பட்டப் படிப்பை மேற்கொள்வோர், அவர்கள் தங்களின் இறுதியாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்து, அதேசமயம், இன்டர்ன்ஷிப்பை நிறைவு செய்யாமல் இருந்தாலும், அவர்கள் ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வை எழுதலாம். அதேசமயம், அவர்கள், மெயின் தேர்வு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஐ.ஏ.எஸ். தேர்வு, முதல்நிலைத் தேர்வு(Preliminary), மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
பணிகள் மற்றும் பொறுப்புகள்
* தொடர்புடைய அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, தனது மாவட்டம் அல்லது பிராந்தியத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதில் உதவுதல். * மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள், நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்தல். இதன்பொருட்டு, அதுதொடர்புடைய பகுதிகளுக்கு பயணம் செய்து, அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கிறதா என்பதைக் கண்காணித்தல். அதன்பிறகு, நடைபெறும் பணிகள் பற்றி, தொடர்புடைய அமைச்சகத்திற்கு தனது கருத்துக்களை(feedback) தெரிவித்தல். * பொது நிதியானது, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முக்கியப் பணியாகும். அதில், ஏதேனும் முறைகேடு நடந்தால், அவர் மாநில சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் பதில்சொல்ல வேண்டியிருக்கும். * வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழும்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள், துன்பத்திலிருந்து மக்களை மீட்டு, நிலைமைய கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். * ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்களது கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்து, நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து, சிறப்பான முடிவுகளை எடுக்க, அரசுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டியுள்ளது.
பணி நிலை
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பணித்தன்மை என்பது, பன்முகத்தன்மை வாய்ந்தது, சவால் மிகுந்தது, ஆர்வமூட்டக்கூடியது அதேசமயத்தில் நிறைவுத்தன்மை கொண்டது.
ஒரு இளநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உருவாக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறார் மற்றும் அவரும் சீனியர் நிலைக்கு உயரும்போது, கொள்கைகள் மற்றும் திட்டங்களை அவரும் சேர்ந்து உருவாக்குகிறார். பொதுத்துறை நிறுவனங்கள் சம்பந்தமான விவகாரங்களை கையாளுதல் உள்பட, பல சிக்கல்களை தீர்த்து வைக்கும் நபராகவும் இருக்கிறார்.
சம்பளம்
Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100 கிரேடு pay ரூ.5,400
சீனியர் டைம் ஸ்கேல்
Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100 கிரேடு pay ரூ.6,600
ஜுனியர் Administrative கிரேடு
Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100 கிரேடு pay ரூ.7,600
Selection கிரேடு
Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100 கிரேடு pay ரூ.8,700
சூப்பர் டைம் ஸ்கேல்
Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100 கிரேடு pay ரூ.10,000
வாய்ப்புகள்
உள்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான், ஐ.பி.எஸ். அதிகாரிகளை வழிநடத்தும் பொறுப்பை வகிக்கிறார்.நிதித்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஒரு அரசின் அனைத்து நிதி செயல்பாடுகளுக்கும் தலைவர்.
சுருக்கமாக சொல்வதென்றால், ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி என்பது, பல்வகை பொறுப்புகளை நிறைவேற்றும் மற்றும் அவற்றை மாறிமாறி மேற்கொள்ளும் நிலையில் உள்ள ஒரு பணியாகும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நேரடியாக உதவக்கூடிய ஒரு பணியாகும்.
நாட்டின் உயர்ந்த பதவியாக உள்ள ஐ.ஏ.எஸ்., பணியில் ஒருவருக்கான பொறுப்புகள் எவ்வளவு அதிகமோ, அந்தளவிற்கு சலுகைகளும் அதிகம்.
நாம் செய்ய வேண்டியது
இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டின் நிர்வாகத்தை நடத்துபவர்கள் என்பதால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால், சமூகத்திற்கு எத்தனையோ நன்மைகள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், பல தீமைகளும் சமூகத்திற்கு நிகழ்ந்துள்ளன.
எனவே, பெரியளவில் நன்மை செய்ய இயலாவிட்டாலும், முடிந்தளவு, தீமை செய்யாமல் இருப்போம் என்பதை உறுதியாக எடுத்துக்கொண்டு, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகுங்கள் மாணவர்களே!

பிஎச்.டி., பட்டத்தை திரும்பப் பெறும் அழகப்பா பல்கலை உத்தரவு ரத்து

         மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபரின் பிஎச்.டி., பட்டத்தை திரும்பப் பெறும் அழகப்பா பல்கலை உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

        அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தாக்கல் செய்த மனு: நான் எம்.எஸ்.சி.,(கணிதம்), பி.எட்., எம்.எட்., படித்தேன். பின் கணிதம், கல்வியியல் பாடங்கள் இணைந்த பிரிவில் பிஎச்.டி., படித்தேன். அமெரிக்கன் கல்லூரி ஆட்சிக்குழு 2011 அக்.,28 ல் என்னை முதல்வர் மற்றும் செயலாளராக தேர்வு செய்தது. இதற்கு, ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மதுரை காமராஜ் பல்கலை ஒப்புதல் வழங்கியது.

       நான் பிஎச்.டி., படிக்கவில்லை. பல்கலை மானியக்குழு விதிப்படி என்னை முதல்வராக நியமித்தது தவறு என பேராசிரியர் டேவிட் அமிர்தராஜன் ஐகோர்ட்டில் மனு செய்தார். காரைக்குடி அழகப்பா பல்கலை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக்குழு 2012 ஜூலை 19 ல், என் பிஎச்.டி., பட்டத்தை திரும்பப் பெறுவதாகவும், கல்வியியலில் மட்டும் பட்டம் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. போதிய விளக்கம் அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அறிவிப்பை பரிசீலிக்கக்கோரி, பல்கலைக்கு விண்ணப்பித்தேன்.

        ஆவணங்கள்படி முடிவு எடுத்ததாகவும், எந்த விளக்கமும் தேவையில்லை எனவும் கூறி, பிஎச்.டி.,யை திரும்ப ஒப்படைக்க பல்கலை உத்தரவிட்டது. இது இயற்கை நீதிக்கு முரணானது. பல்கலை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.பேராசிரியர் டேவிட் அமிர்தராஜன், தவமணி கிறிஸ்டோபரை முதல்வராக நியமித்ததற்கு, அங்கீகாரம் வழங்கிய, மதுரை காமராஜ் பல்கலை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு செய்தார்.

           நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு: பிஎச்.டி.,யை திரும்பப் பெறும் அழகப்பா பல்கலை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தவமணி கிறிஸ்டோபருக்கு, தகுதி அடிப்படையில் பல்கலை பதிவாளர் நோட்டீஸ் அளித்து விளக்கம் பெற வேண்டும். பதிவாளர் 4 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதனடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள், தேவைப்படின் ஐகோர்ட்டை அணுகி பரிகாரம் தேடலாம்.

            டேவிட் அமிர்தராஜன் மனுவைப் பொறுத்தவரை, அழகப்பா பல்கலை தவமணி கிறிஸ்டோபரின் பிஎச்.டி., குறித்து முடிவு செய்து அளிக்கும் சான்றிதழ் பற்றி, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,)யுடன் மதுரை காமராஜ் பல்கலை ஆலோசித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன்படி, முதல்வரின் நியமனம் இருக்கும். அதுவரை, தவமணி கிறிஸ்டோபர் முதல்வராக தொடரலாம். மனுக்கள் பைசல் செய்யப்படுகின்றன என்றார்.

இன்று நடைபெற இருந்த TET மற்றும் PGTRB குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி


இன்று நடைபெற இருந்த TET மற்றும் PGTRB குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
முழுமையான விவரம் விரைவில் தெரியும் காத்திருங்கள்.

NOTE: Today listed Answer key related cases only disposed. Other cases stage soon we publish.

BRTE ஒட்டுமொத்த மாறுதலை எதிர்த்து சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி


IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 24.06.2014
CORAM
THE HONOURABLE Mr.JUSTICE S. NAGAMUTHU
W.P.No.16328 of 2014 and
M.P.Nos.1 & 2 of 2014

TAMIL NADU BLOCK RESOURCE
TEACHERS DEVELOPMENT ASSOCIATION REG.NO.
63/2009 REP. BY SECRETARY M.MARIYAPRAKASAM
HEAD OFF: 8 ARUMUGAM LAYOUT 2ND ST. V.
MARUTHUR VILLUPURAM. .. Petitioner

-Vs.-


1 THE PRINCIPAL SECRETARY
TO GOVERNMENT SCHOOL EDUCATION DEPARTMENT
TAMIL NADU FORT ST. GEORGE CHENNAI-9.

2 THE DIRECTOR OF SCHOOL
EDUCATION DPI CAMPUS COLLEGE ROAD CHENNAI-
6.

3 THE DIRECTOR OF ELEMENTARY
EDUCATION DPI CAMPUS COLLEGE ROAD CHENNAI-
6.

.. Respondents

PRAYER: Petition filed under Article 226 of the Constitution of India praying for the issuance of a Writ of Certiorari calling for the entire records in impugned G.O(1D) No.137, dated 09.06.2014 passed by the first respondent and quash the same.

For Petitioner : Mr.R.Prabakaran

For Respondents : Mr.R.Rajeswaran,
Special Government Pleader


ORDER

The petitioner is an Association known as TAMIL NADU BLOCK RESOURCE TEACHERS DEVELOPMENT ASSOCIATION . According to the petitioner, its members are Teachers working in various schools in the State of Tamil Nadu under the Director of School Education. By conducting a counseling, 4587 Teachers have been transferred from their original place of working to various places at their option. Challenging the same, the petitioner/Association is before this Court with this writ petition.

2.This writ petition has come up today for admission. Mr.R.Rajeswaran, learned Special Government Pleader takes notice for the respondents.

3.I have heard the learned counsel for the petitioner and the learned Special Government Pleader appearing for the respondents and I have also perused the records carefully.

4.When a specific query was made to the learned counsel for the petitioner as to how the writ petition is maintainable before this Court at the instance of an Association in a service matter when none of these 4587 Teachers has come up with any writ petition, the learned counsel for the petitioner submitted that when a group of people are affected by a single order of the Government, it is always open for the Association to represent its members to maintain a writ petition. He would further submit that in respect of service matter, no Public Interest Litigation is maintainable and therefore, it is for the Association to file a writ petition voicing the cause of its members. The learned counsel would further submit that there is violation of fundamental rights since, the order of transfer is arbitrary and un-reasonable and therefore, according to the learned counsel, the writ petition is maintainable. To substantiate the said contention, he would further submit that there are certain judgments of this Court to that effect.

5.It is now well settled that in a service matter, an Association, cannot file a writ petition, challenging the order passed against any individual Government employee. Here, in this case, based on the failure of the Government that a Teacher who is working in a particular place for more than two years is transferred, in the larger interest of the Institution, 4587 Teachers have been transferred. These Teachers participated in the transfer counseling and without any protest, they opted their own choice of place for transfer and accordingly, they have been transferred.

6.Assuming that there was no transparency in the matter of transfer of the above said 4587 Teachers and there was arbitrariness on the part of any authority, it would be appropriate for those Teachers to file writ petition. When no Teacher feels aggrieved, it is really surprising that the Association has come up with this writ petition, that too when there is no protest at the time of transfer counseling.

7.Going by the settled law, more particularly, in respect of transfer matters of Teachers, I am of the view that the writ petition filed by the petitioner in the capacity of Association cannot be maintainable. In the result, the writ petition fails and accordingly, the same is dismissed. No costs. Consequently, connected miscellaneous petitions are closed.

24.06.2014
jbm

Index : Yes/No

Internet:Yes/No
Note:- Issue copy on 30.06.2014.

To

1 THE PRINCIPAL SECRETARY
TO GOVERNMENT SCHOOL EDUCATION DEPARTMENT
TAMIL NADU FORT ST. GEORGE CHENNAI-9.

2 THE DIRECTOR OF SCHOOL
EDUCATION DPI CAMPUS COLLEGE ROAD CHENNAI-
6.

3 THE DIRECTOR OF ELEMENTARY
EDUCATION DPI CAMPUS COLLEGE ROAD CHENNAI-
6.
S.NAGAMUTHU,J.
Jbm