Email: brtespudukkottai@gmail.com Email:chinnaphy@gmail.com
Tuesday, March 17, 2015
Tuesday, March 10, 2015
குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு: மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 2(நேர்காணல் பணிக்கான இடங்கள்) பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.
தமிழகத்தில் காலியாகவுள்ள ஆயிரத்து 130 குரூப் 2 பணியிடங்களுக்கான பிரதானத் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை (மார்ச் 9) வெளியிடப்பட்டன. தேர்வில் வெற்றி பெற்ற 5 ஆயிரத்து 500 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் மார்ச் 26 முதல் தொடங்கவுள்ளன. இதற்கான தகவல்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
சென்னை பிராட்வேயிலுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும். இதற்கு அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். இதன்பின், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது
Saturday, March 7, 2015
தமிழக அரசு துறைத்தேர்வுகள் - மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் -TNPSC
தமிழக அரசு துறைத்தேர்வுகள் எழுத மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.
தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
அறிவிக்கை நாள் : 1.03.2015
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.
மேலும் விவரங்களுக்கு : www.tnpsc.gov.in இணைய தளத்தைப் பார்க்கவும்.
தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
அறிவிக்கை நாள் : 1.03.2015
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.
மேலும் விவரங்களுக்கு : www.tnpsc.gov.in இணைய தளத்தைப் பார்க்கவும்.
துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously the District Office Manual--Two Parts) (With Books).
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .ARGTA news
ARGTA FLASH NEWS. ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களே வணக்கம். இனிய செய்தி வானூர் BRC பொறுப்பு மேற்பார்வையாளர் திருவாளர்.முனியன் இன்று மீண்டும் பணியில் சேர்கிறார் . இவருக்கு பணிநீட்டிப்பு வழங்காமல் மறுக்கப்பட்டது .நமது ARGTA வின் வழிகாட்டுதலின் படி நீதிமன்றத்தை அணுகி பெறப்பட்டது . இவை அனைத்திற்கும் வழிகாட்டிய நமது மாநில தலைவர் எம்.ராஜ்குமார் திண்டுக்கல் ,மாநில பொதுச்செயலாளர் தா.வாசுதேவன். விழுப்புரம் ,மாநில பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மதுரை,இணைச்செயளாளர் பரமேஸ்வரன் வேலூர்,மாநில மகளிர் அணி தலைவி அபிராமி கரூர்,விழுப்புரம் மாவட்ட முதன்மைச் செயளாலர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மனமார்ந்த நன்றி .
Thursday, March 5, 2015
குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சி
அக இ - தொடக்க நிலை / உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்து கலந்துரையாடல்" என்ற தலைப்பில் 14.03.2015 அன்று குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த
ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில்
50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு
அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து
வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து
ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய
முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக
அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும்.
DEPARTMENTAL EXAM - 2015 ONLINE APPLY & NOTIFICATION
List of Current Notifications
| ||||||
S No.
|
Advt. No./ Date of Notification
|
Notification
|
Online Registration
|
Date of Examination
|
Activity
| |
From
|
To
| |||||
1
|
01.03.2015
|
Deptl.Exam May'2015
|
01.03.2014
|
31.03.2015
|
24.05.2015
to
31.05.2015 |
|
Wednesday, September 10, 2014
ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்
1. திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி.இராசாத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. துணை இயக்குனராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி, திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4. தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)