Monday, May 25, 2015

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு ஆன் - லைனில் அப்ளிகேஷன்

புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பம், முதன்முறையாக, இந்த ஆண்டில் இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. 

தண்ணீர் பற்றாக்குறையை இந்தியா சமாளிக்குமா?

இது தொடர்பாக, இந் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:இந்தியாவில் நிலத்தடி நீரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. நீர் பாசன தேவையில், 70 சதவீதம் நிலத்தடி நீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அதுபோல், குடிநீர் உள்ளிட்ட இதர பயன்பாடுகளுக்கு, 80 சதவீதநிலத்தடி நீர் உபயோகிக்கப் படுகிறது.

தமிழக முதல்வராக, நேற்று முன்தினம் பதவியேற்ற ஜெயலலிதா, நேற்று கோட்டைக்கு வந்து பொறுப்பேற்ற முதல் நாளில், ஐந்து புதிய திட்டங்களை அறிவித்தார்.






ARGTA - செய்தி


அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நமது மாநில நிர்வாகிகள் மே மாதம் 27 ம் நாள் புதன்கிழமை “பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர், மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)" ஆகியோரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை தெரிவிக்க உள்ளனர்.


- மாநிலத் தலைவர்
ARGTA

தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை இன்று நடத்த இயக்குநர் உத்தரவு



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டத்தை திங்கள்கிழமை(மே 25), அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அறிவியல், வணிகவியல் படிக்க ஆர்வம்; பிளஸ் 1 வகுப்பில் மாணவர் விரும்பும் பிரிவில் சேர்க்க வேண்டும்; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

45 ஆயிரம் ஆசிரியர்களின்பிரச்னைக்கு தீர்வு

தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவுஎன்றபிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா முதல்வராகபதவியேற்றுள்ளதால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க,பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.
கடந்த, 2003- 06ல், அ.தி.மு.க., ஆட்சியில், தொடக்கக் கல்வி,இடைநிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில்,40 ஆயிரம்ஆசிரியர்கள்; அரசு உதவிபெறும் பள்ளிகளில்,5,000 ஆசிரியர்கள்தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

பொதுத் துறை மற்றும் அரசு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகளில், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது போல், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடும் உள்ளது.

கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன


தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு, வங்கிகள்அளிக்கும் கடனைப் பெறுவது குறித்து, மாணவர்கள் மற்றும்பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பமும், தயக்கமும் நிலவுகிறது.எந்தவங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அந்த வங்கியில் கடன்கேட்டுவிண்ணப்பிக்கலாம். வங்கிக் கணக்கு இல்லை என்றால்,வசிப்பிடத்துக்கு அருகில் வங்கிக் கிளையில் விண்ணப்பிக்கலாம்.வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையைத் தாண்டி, பிறபகுதி வங்கிக் கிளைகளில் விண்ணப்பிக்க முடியாது.


மாணவர் மைனராக இருந்தால், பெற்றோர் பெயரிலும், மேஜராகஇருந்தால், மாணவர் மற்றும் பெற்றோர் இருவரின் பெயரிலும்,வங்கிக் கடன் அளிக்கப்படும்.

கடன் தொகை, 4 லட்சம் ரூபாய் வரை, எவ்வித உத்தரவாதமும்தேவையில்லை. 4 லட்சம் முதல், 7 லட்சம் ரூபாய் வரை, மூன்றாம்நபர் உத்தரவாதம் அவசியம்; 7 லட்சம் ரூபாய்க்கு மேல், வாங்கும்கல்விக் கடனுக்கு, கடன் தொகை அளவுக்கான, சொத்தைஉத்தரவாதமாக அளிக்க வேண்டும்.

கடன் கோரும் விண்ணப்பத்துடன், மதிப்பெண் சான்றிதழ், கல்லூரிசேர்க்கைக்கான சான்று, கல்லூரி முதல்வரின் பரிந்துரை கடிதத்தின்உண்மை நகல், படிப்புக் காலம் முடியும் வரையிலான, கட்டணவிவரம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.கல்லூரியில், முதலாம்ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்திய பின், கல்விக் கடன்அளிக்கப்பட்டால், கல்லூரியில் செலுத்திய முதலாம் ஆண்டுதொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். கல்விக் கட்டணம்அனைத்தும், கல்லூரி நிர்வாகத்துக்கு, வங்கி மூலம் அனுப்பப்படும்.
கல்விக் கடனுக்கு, படிப்பு முடியும் வரையும், படிப்பு முடித்த ஓராண்டுவரையும் வட்டி இல்லை. கல்விக் கடனை திருப்பி செலுத்த,உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கு, 60மாதங்களும், வெளிநாட்டில் படிப்போருக்கு, 84 மாதங்கள் வரையும்அவகாசம் தரப்படுகிறது.கல்லூரி சேர்க்கை உறுதியானஅனைவருக்கும், கல்விக் கடன் பெறும் தகுதி உண்டு. படிக்கும்காலத்தில், ஒவ்வொரு, செமஸ்டர் அல்லது ஆண்டுபருவத்தேர்வுகளில், தேர்ச்சி பெற வேண்டும். ஏதாவது ஒரு பாடத்தில்தோல்வியுற்றாலும்,உடனடியாக அடுத்து நடக்கும் தேர்வில்,தோல்வியுற்ற பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையேல்,கல்விக் கடன் பாதியில் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு

மாணவர் குறைந்துள்ள தொடக்க பள்ளிகளில் ஆட்குறைப்பு

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப் -டாப் வழங்குவதில் தாமதம்

Wednesday, May 6, 2015

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்களை பின்தங்கியகுடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. இதற்கான கட்டணச் செலவை கல்வி உரிமைச்சட்டப்படி மத்திய அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

Wednesday, April 22, 2015

பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு


சென்னையில் 10-வது வகுப்பு, பிளஸ்-2 பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மூலம் அறிவுரை வழங்கி வருகிறார்கள். பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

ARGTA - கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் - நிழற்படம் & பத்திரிக்கைச் செய்தி

நமது "அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் (ARGTA)"சார்பாக 16.04.15 அன்று"மாநில அளவில் நடத்தப்பட்ட "மாபெறும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் " மதுரை,திண்டுக்கல்,இராமநாதபுரம் ,ஈரோடு,புதுக்கோட்டை ,நாமக்கல், விழுப்புரம் ,விருதுநகர் ,கோவை ,திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களில் மகத்தான வெற்றியடைய சிறப்பாக செயல்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் .மேலும் பல்வேறு மாவட்டங்களில் விரைவில் "மாபெறும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் " நடத்த இருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

மாநில செயற் குழு, பொதுக் குழு கூட்டம்

அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் (ARGTA) நமது சங்கத்தின் மாநில செயற் குழு, பொதுக் குழு கூட்டம் வரும் சனிக்கிழமை25.04.2015 அன்று  காலை 10 மணியளவில் கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 

மாநிலத் தலைவர்
குறிப்பு : கூட்டம் நடைபெறும் இடம்சக்தி விநாயகா திருமண மண்டபம், இராமகிருஷ்ணபுரம் சேரன் பள்ளி எதிரில், கரூர்.கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது.இக்கூட்டத்தில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களின் மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநில செயற் குழு, பொதுக் குழுக் கூட்டம்


Friday, March 27, 2015

ARGTAவை JACTTO அமைப்புடன் இணைத்துக்கொண்டமைக்கு, JACTTO அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ARGTA சார்பில் நன்றி தெரிவிப்பு

 21.03.14 சென்னை சூளைமேடில் தழிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற JACTTO உயர் மட்டக் குழு கூட்டத்தில் நமது "அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் (ARGTA)

Friday, March 20, 2015

பயிற்றுநர்களின் பணிநேரம், வருகைப் பதிவு குறித்த RTI சேலத்திலிருந்து கேள்விகள்..

அரசாணைகள்

ஆண்டிற்கு 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்புதல் குறித்த அரசாணை


2014 - 15 கல்வியாண்டின் பொது மாறுதல் , பணிநிரவல் குறித்த அரசாணை

TN SUBORDINATE SERVICES RULES

TN MINISTERIAL SERVICES RULES

THE FUNDAMENTAL RULES OF TAMILNADU GOVERMENT

TN GOVT. BASIC SERVICES

அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள்

CCE - அரசாணை

6 மாத கால மகப்பேறு விடுப்பு

பள்ளிகளில் பணிநிரவல் குறித்த அரசாணை

G.O 264 - பள்ளிகளில் இறை வணக்கம் நடத்துதல்

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - அரசாணை

NHIS- List of diseases & Treatment 

NHIS - Revised list of HOSPITALS

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - அரசாணை

எம்.ஃபில், பி.எச்.டி - ஊக்க ஊதிய உயர்வு 

எம்.ஃபில் - ஊக்க ஊதிய உயர்வு - எந்த தேதி முதல்

Equivalent Degrees

பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 2015 -16

Tuesday, March 17, 2015

பேனா மூடியை விழுங்கியதால் வகுப்பறையில் துடி துடித்து உயிரிழந்த 1-ம் வகுப்பு மாணவன்

வகுப்பறையில் விளையாடிய போது விசிலடிக்க பயன்படுத்தப்பட்ட பேனா மூடியை எதிர்பாராத விதமாக விழுங்கிய சிறுவன் பள்ளியிலேயே துடி துடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி முத்துச்செட்டி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வருகிற 10-வது கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்கள்

வருகிற 10-வது கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள் சென்னையைச் சேர்ந்த கணித ஆசிரியைகள் கே.கல்பனாவும் சொர்ணவல்லியும்.பொதுவானவை தேர்வறைக்குள் நுழைந்ததும் விடைத்தாளை அமைதியாக படிக்கவும். நன்றாகப் படிக்கிற மாணவர்கள் கூட பதற்றத்தில் பிளஸ் குறி போடும் இடத்தில் மைனஸ் குறி போட்டு மொத்த மதிப்பெண்கள் இழந்து போகிற சம்பவங்களும் நடக்கின்றன. பதற்றம் வேண்டவே வேண்டாம்.

வினாக்களின் எண்களை மிகச்சரியாக குறிப்பிட்டு விடைகளை எழுத வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் இழப்பு ஏற்படும்.

பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட உத்தரவு-கட்டாய கல்வி உரிமை சட்ட விழிப்புணர்வு:

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு விடுமுறை நாள் குறுவளமையப் பயிற்சிக்கு 10 ஈடுசெய்விடுப்பு நாட்கள் அனுமதிக்கும் அரசாணை

Tuesday, March 10, 2015

குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு: மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 2(நேர்காணல் பணிக்கான இடங்கள்) பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆயிரத்து 130 குரூப் 2 பணியிடங்களுக்கான பிரதானத் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை (மார்ச் 9) வெளியிடப்பட்டன. தேர்வில் வெற்றி பெற்ற 5 ஆயிரத்து 500 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் மார்ச் 26 முதல் தொடங்கவுள்ளன. இதற்கான தகவல்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

சென்னை பிராட்வேயிலுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும். இதற்கு அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். இதன்பின், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது

Saturday, March 7, 2015

தெரிந்து கொள்வோம் வாங்க .

 டைனமைட்டு


டயனமைட்டின் வரைபடம்
  1. நைட்ரோ கிளிசரினில் ஊறவைத்த ரம்பத்தூள் (அல்லது இது போன்ற உறிஞ்சும் தன்மையுள்ள பொருள்)

தமிழக அரசு துறைத்தேர்வுகள் - மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் -TNPSC

தமிழக அரசு துறைத்தேர்வுகள் எழுத மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
அறிவிக்கை நாள் : 1.03.2015
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.
மேலும் விவரங்களுக்கு : www.tnpsc.gov.in இணைய தளத்தைப் பார்க்கவும். 

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்


பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously the District Office Manual--Two Parts) (With Books).

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .

ARGTA news

ARGTA FLASH NEWS. ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களே வணக்கம். இனிய செய்தி வானூர் BRC பொறுப்பு மேற்பார்வையாளர் திருவாளர்.முனியன் இன்று மீண்டும் பணியில் சேர்கிறார் . இவருக்கு பணிநீட்டிப்பு வழங்காமல் மறுக்கப்பட்டது .நமது ARGTA வின் வழிகாட்டுதலின் படி நீதிமன்றத்தை அணுகி பெறப்பட்டது . இவை அனைத்திற்கும் வழிகாட்டிய நமது மாநில தலைவர் எம்.ராஜ்குமார் திண்டுக்கல் ,மாநில பொதுச்செயலாளர் தா.வாசுதேவன். விழுப்புரம் ,மாநில பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மதுரை,இணைச்செயளாளர் பரமேஸ்வரன் வேலூர்,மாநில மகளிர் அணி தலைவி அபிராமி கரூர்,விழுப்புரம் மாவட்ட முதன்மைச் செயளாலர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மனமார்ந்த நன்றி .

Thursday, March 5, 2015

குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சி

அக இ - தொடக்க நிலை / உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்து கலந்துரையாடல்" என்ற தலைப்பில் 14.03.2015 அன்று குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த
ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில்
50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு
 அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து
வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து
ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய
முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக
அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும்.

DEPARTMENTAL EXAM - 2015 ONLINE APPLY & NOTIFICATION


List of Current Notifications
S No.
Advt. No./ Date of Notification
Notification
Online Registration
Date of Examination
Activity

From
To
1

01.03.2015
Deptl.Exam May'2015
·    Tamil Version
01.03.2014
31.03.2015
24.05.2015
 to
31.05.2015