Tuesday, July 8, 2014

BRT மாறுதல் சார்பாக தள்ளுபடியான வழக்கு மீண்டும் மேல்முறையீடு

 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பாக தள்ளுபடியான வழக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டு நாளை விசாரணக்கு வருகிறது
அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித்துறை நாள்.9.6.2014ன் படி 2014-15ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 3ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி என்ற விதி பொருந்தாத நிலையில் 3ஆண்டுகள் அதற்குமேல் பணிபுரிந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு 24.06.2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தொடுக்கப்பட்டு நாளை விசாரணைக்கு வரவுள்ளது என தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் முன்னேற்ற சங்க தலைவர் திரு.கே.சம்பத் தெரிவித்தார்.

No comments: